February 2, 2011

ஒப்புர வொழுகு

வணக்கம்.என் தொப்புள் கொடி உறவுகளே . ஓன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை நடைமுறை படுத்த தவறி விட்டோம்.மலேசிய தமிழர்களின் எண்ணம், ஏக்கம், எதிர்பார்ப்பு,உரிமை, கானல் நீர் தான்.

3 comments:

kooththarasan@gmail.com said...

தமிழா உனை உரசிவிட்டால் தீப்பொறி பறக்கும்

புரட்சி வெடித்தால் புதிது பிறக்கும்- தமிழா உனை
உரசி விட்டால் தீப்பொறி பறக்கும்..

உரத்தை மனதிலே தேக்கி வைத்திடு- காலம்
ஒருநாள் வாய்க்கும் ; வீறு கொண்டெழு
புரட்சி..

ஒற்றுமை என்பது சாதியில் இல்லை-தம்பி
ஒற்றுமை என்பது மதத்திலு மில்லை
ஒற்றுமை என்பது இனமான உணர்வாம்-அது
பற்றுக் கொள்வது மொழிவழித் தொடர்பாம்
புரட்சி..

அரசியல் கட்சி ஆயிரம் சொல்லும்-நமை
அன்பாக அணைத்து நஞ்சினை ஊட்டும்
இரவில் சலுகை இரவலாய்க் கொடுக்கும்-மறுநாள்
இருந்த உரிமையும் இழிநிலை ஆக்கும்
புரட்சி..

ஆலயம் கட்டுவதை கொஞ்சம் நிறுத்திடு-கல்விச்
சாலைகள் திறப்பதில் அறிவைச் செலுத்திடு
ஏலம் விடுவார் சலுகையதை விடுத்திடு- நீ
ஏற்புடன் இந்நாட்டு உரிமை கேட்டிடு
புரட்சி…

கவிஞர் கூத்தரசன்
16/02/2011 12.53 காலை

kooththarasan@gmail.com said...

தமிழா உனை உரசிவிட்டால் தீப்பொறி பறக்கும்

புரட்சி வெடித்தால் புதிது பிறக்கும்- தமிழா உனை
உரசி விட்டால் தீப்பொறி பறக்கும்..

உரத்தை மனதிலே தேக்கி வைத்திடு- காலம்
ஒருநாள் வாய்க்கும் ; வீறு கொண்டெழு
புரட்சி..

ஒற்றுமை என்பது சாதியில் இல்லை-தம்பி
ஒற்றுமை என்பது மதத்திலு மில்லை
ஒற்றுமை என்பது இனமான உணர்வாம்-அது
பற்றுக் கொள்வது மொழிவழித் தொடர்பாம்
புரட்சி..

அரசியல் கட்சி ஆயிரம் சொல்லும்-நமை
அன்பாக அணைத்து நஞ்சினை ஊட்டும்
இரவில் சலுகை இரவலாய்க் கொடுக்கும்-மறுநாள்
இருந்த உரிமையும் இழிநிலை ஆக்கும்
புரட்சி..

ஆலயம் கட்டுவதை கொஞ்சம் நிறுத்திடு-கல்விச்
சாலைகள் திறப்பதில் அறிவைச் செலுத்திடு
ஏலம் விடுவார் சலுகையதை விடுத்திடு- நீ
ஏற்புடன் இந்நாட்டு உரிமை கேட்டிடு
புரட்சி…

கவிஞர் கூத்தரசன்
16/02/2011 12.53 காலை

grandoldman said...

புரட்சித் தலைவா!

புரட்டிடு நாட்டை....
விரட்டிடு புரட்டை...

சாதி சாகட்டும்..
சமுதாயம் சிறக்கட்டும்..

அரசியல் அழிவுக்கல்ல..
ஆக்கத்திற்கே..

தொடரட்டும் உங்கள் இலக்கியப் பணி