August 8, 2010

Pon Paavalar Mandram - Tamil

 மன்றத்தின் முகவரி
பொன பாவலர் மன்றம்,
எண் 20, ஜாலான் கிளேடாங் ராயா 13,
தாமான் ஸ்ரீ தஹான், 30200 ஈப்போ, பேராக்

தொலைபேசி: 012-5006161


பொன் பாவலர் மன்றம் கடந்த 2002 ஆம் ஆண்டு பதிவு பெற்றது. அம்மன்றம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தியும், பொது நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றும், தமிழ் மொழியின் சிறப்பு. தமிழின மேன்மைகளை வெளிப் படுத்தி தனக்கு என ஒரு தனித் தன்மையை வகுத்து வருவதை அனைவரும் அறிவர்.

மரபுப் பாவலர்களையும் புதிதாக எழுத்துத் துறையில் ஈடுபட ஆர்வம் காட்டும் தமிழ் வாசகர்களையும், தமிழ் ஆர்வலர்களையும் மன்றத்தில் உறுப்பியம் பெறச் செய்து, சிறப்பாக இயங்கி வருகிறது.

உலகத் தமிழர் மாமன்றத்தின் தமிழகப் பேராளர் ஐயா ஜனார்த்தனம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை முன்னாள் தலைவர் பேராசிரியர் அமரர் மு.தமிழ்க்குடிமகன், உவமைப்பித்தர், புலவர் முனியமுத்து, தஞ்சை பல்கலைக்கழகப் பேராசிரியர் கு.வெ.பாலசுப்பிரமணியம், உலகத் தமிழர் மையத்தின் பொதுச் செயலாளரும், தமிழ் பற்றாளருமான உழைப்புச் செம்மல் இரா.மதிவாணன் போன்றவர்களுக்கு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி, அவர்கள் வாயிலாக உலகத்தின் பல பகுதிகளில் வாழ்ந்து வரும் எட்டுக் கோடி தமிழர்கள் பற்றியும், தமிழ் மொழியின் இன்றியமையாமையைப் பற்றியும், விரிவான செய்திகளை வெளிப் படுத்தி வந்திருக்கிறோம். இம்மன்றம் ‘ருக்குன் நெகாரா’ கோட்பாட்டைப் பின் பற்றுகிறது.

இவ்வாறான பணிகளின் தொடர்ச்சியாக, எதிர்காலத்தில் தமிழ் அறியாத் தமிழ்ப் பிள்ளைகள் தமிழ் அறிவு பெறவும் வாழ்வியல் ஒழுக்கங்களில் அவர்கள் சிறந்து விளங்கவும் கருத்தரங்குகளை ஏற்படுத்துவது: சங்க இலக்கியங்களில் பொதிந்து கிடக்கின்ற தொன்மைச் சிறப்புகளையும், பண்பாட்டு நெறிமுறைகளையும், தக்காரைக் கொண்டு தெளிவு படுத்தவும், மரபு வழிப் பாவினங்களையும், அவற்றின் உள்ளுரைகளையும், அருள் நிதியம் நிதி நிலையை உருவாக்கி தமிழ்ப் பாவலர்களின் எழுத்துப் படிவங்களை சமுதாயப் பார்வைக்கு கொண்டு செல்லுதலும், மன்றத்திற்கு என்று ஒரு கட்டடம் வாங்கி அதில் மன்ற நிகழ்வுகளையும் நடத்துதல் என்று பல்வேறு திட்டங்களைச் செயல் படுத்த மன்றம் எண்ணியுள்ளது.

இவற்றைச் செயல் படுத்த போதுமான நிதி வேண்டும். நிதி நிலையை, வளப்படுத்த வேண்டிய நிலையை வளப்படுத்தும் முதன்மை எண்ணத்தில் 20-08-2006 ஆம் நாளான்று ஈப்போ மாநகரத்தில், பேரா மாநில ம.இ.கா தொடர்புக் குழுத் தலைவரும் மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான மாண்புமிகு டத்தோ கோ.இராஜு அவர்கள் தலைமையில் வளர்ச்சி நிதி விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தோம். இவ்விருந்து நிகழ்வில் பல அமைப்புகளின் தமிழ் அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இம்மன்றம் நாட்டின் சிறந்த தமிழ்க் கவிஞர் தமிழ்மணி எல்லோன், ஈப்போ அவர்களை ஆலோசகராகக் கொண்டும் அருள் க.ஆறுமுகம் PJK, BPP அவர்களைத் தலைவராகக் கொண்டும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அவருக்குத் துணையாகக் கவிஞர் திரு.முனுசாமி AMP, PPT, PJK துணைத் தலைவராகவும் கவிஞர் திரு.ந.கு.முல்லைச்செல்வன் செயலாளராகவும், கவிஞர் திரு.கி.கூத்தரசன் துணைச் செயலாளராகவும், கவிஞர் திருமதி.வி.வினிதா B.A.(Hon) பொருளாளராகவும், செயற்குழுவில் திரு.பி.கிருஷ்ணன், கவிஞர் திரு.கே.நாராயணன் PPN, திரு.பாஸ்கரன், திருமதி மேரி, திரு.இராமகோபால் PJK, திரு.ம.வீரகுமரன் ஆகியோரும் சேவையாற்றி வருகின்றனர்.

24 comments:

grandoldman said...

Vaazhtugal.

kooththarasan@gmail.com said...

Pon Paavalar Mandram, Thoora Nookkudan sinthithu, ilaya thalaimuraiyinarai tamizin paalum, tamiz inaththin paalum iidupadukollach seithu, Paaventhar Baarathithaasan kanavu kandathu pool, ulaga mozikalil ellaam ulla uyarntha karuthugalai pathivirakkam seithu, tamizargal payanadaiyach seyyum ateh veelayil, tamil moziyil ulla karuththuk karuvuulanggalai ulaga makkalukku eduththu sellum unggal "vaanam paadi paravai poola", ipputhiya "Blog" puthiya attiyaayaththai thodanggi ullathu. Vaalthugal. Pon Paavalar mandram thodarnthu puthiya puthiya seyalvadivam kaana vendum endru meendum vaaltugireen.
kavinyar: kooththarasan@gmail.com

பொன் பாவலர் மன்றம் said...

malaiyagathil pon paavalarmandram oru munodiyaga irukka vendum.aru k.arumugam

kooththarasan@gmail.com said...

Sir, your comments are the Vision!!!
And we should concerntrade on the Mission side!
And work towards the Mission in order to achive the Vision.
As for the "Road to success" we have to plan a proper Action Plan. We have also choosen a proper "Blog" to widen up and activate our actions! congratulations once again! The
informatic world be ours. Kavinyar: Kooththarasan

yelilranee said...

vanakkam.Unggaludayya, Pon Paavalar mandra valai paguthiyai aarambithamaikkaaga vaaltugal.
Pon paavalar manda uruppiyam pera " valai paaram" thayaariththaal ellorum uruppiyam pera vaaippu kidaikkum.

பொன் பாவலர் மன்றம் said...

Anbulla Elilranee, ungal vazhtukku nanri. Ungaludaiya aalosanai sirappaana onru. Thangalin min anjal mugavari thantaal nallathu.

Nanri

பொன் பாவலர் மன்றம் said...

Vanakkam. Vazhtugal.

paavilanggon said...

Vazhtugal. Unggal Ilakkiayappani thodarattum.

paavilanggon said...

Illakkiaya manrattirkku agappakkam iruppathu magizhchi.

kooththarasan@gmail.com said...

Dear, Pon Paavalar Mandram,
This page can be check in other languages but not in our Semmozi Tamil Mozi.
Please do necessary upgradings to this side as to communicate through Tamil.
Please do it ASAP.
ThankYou
We Carw! We Can!
Kavinyar: kooththarasan@gmail.com

kooththarasan@gmail.com said...

அன்புள்ள,
பொன் பாவலர் மன்ற உறுப்பினர்களுக்கு வணக்கமும் வாழ்த்துகளும்..
kooththarasan@gmail.com

kooththarasan@gmail.com said...

தனித்தமிழ் போற்றும் தன்மானக் காவலன் - எங்கள்
தகவுடை சூரியப் பாவலரி லங்கண்ணன்

நேற்றிருந்தார் இன்றில்லை – எங்கள்
சூரியப் பாவலரி லங்கண்ணன்
நேற்றிருந்தார் இன்றில்லை

நெற்றிப் பொட்டுத் தெரிக்கும்
கருத்துக் கனல் – பெரியார்
பற்று மிகமிக்க வெறிக்கும்
பாசப் புனல்
நேற்றிருந்தார்….

தனித்தமிழ் போற்றும் தன்மானக் காவலனாம்-நல்ல
கனிமொழி பேசும் பண்பாள ரன்பனாம்
இனியன செயல்வழி எடுத்தாளும் செயலனாம் - என்றும்
இனிவரும் கவிக்குலம் இன்புறுங் கவிவேந்தனாம்
நேற்றிருந்தார்….

பகுத்தறிவுக் கொள்கைப் பற்றாளர்க் கேந்தலாம் – நுனி
பக்குவம் தவறாத சிலம்பக் கலைஞனாம்
தகுபொருள் இல்லா தன்னிலை யெளியனாம்- தாழ்வெனில்
வெகுண்டெழும் போர்குண தமிழ்வீர மறவனாம்
நேற்றிருந்தார்….

திருக்குறள் போற்றும் நற்றமிழ் அறிஞனாம் – கீழ்
மருள்நிலை பற்றில்லா அருள்நிலை மாந்தனாம்
விருப்பு வெறுப்பில்லா நடுநிலை நாயகனாம் - தமிழன்
இருள்நிலை நீக்க எழுதிட்ட மாகவிஞனாம்
நேற்றிருந்தார்….

பலகைக் குடிலே அவனரண் மனையாம் – சங்கப்
பலகைக் குடிலே அவனரண் மனையாம்
உலகை மணக்கும் கவிதைத் துண்டுகளாம் - அவன்
உலகை மணக்கும் கவிதைத் துண்டுகளாம்
நேற்றிருந்தார்….

கூத்தரசன்

yelilranee said...

வணக்கம். பொன் பாவலர் மன்ற உறுப்பியம் பெறுவதற்கான சிறப்புத் தகுதிகளை நீங்கள் விதித்துள்ளீர்களா? அப்படி இருப்பின் தெரியப்படுத்தவும்.
நன்றி.
yelilmathi@gmail.com

grandoldman said...

…ì¿»îÌ[ Ø€° צ™Å ‚Ñ×Å ƒÏ¹°[Ö ~º[³Å. ‡›æ¥ò }°[¥Ñ½ }[¯¥[Ö º[ÌÅ ñ¿» €×¿~º[Å.
°›äò ‚Ñ×´±í µòê.

பொன் பாவலர் மன்றம் said...

அன்புடையீர்,வணக்கம். மன்றத்தின் கட்டட வளர்ச்சி் நிதிக்காக சூரியப்பாவலர் அமரர் நா.இளங்கண்ணனின் “மகிழ்ம்பூ”
கவிதை தொகுப்பு நூல் விரைவில் வெளீயீடு காணவுள்ளது.எதிர்ப்பார்த்து காத்திருங்கள். ”தமிழ்ழோடு உயர்வோம்”

பொன் பாவலர் மன்றம் said...

பணம்
உழைக்கின்ற ஏழையர்க்கு
உலகத்தில் வேண்டுவதோ
ஒப்பரிய பொருளென்னும்
பணந்தானய்யா - விண்

கலகத்தில் உருள்கின்ற
கயவர்க்கும் காலமெல்லாம்
காப்பாற்ற செயுமிந்த
பணந்தானய்யா-நாளை.....

தொடரும்

grand old man said...

hi..

grand old man said...

hi..

Anonymous said...

பொன் நாவலனின் கவிதை நூல் வரும் 17.9.2010 அன்று ஈப்போவில் மன்ற ஏற்பாட்டில் நடைபெறுகிறது.

grandoldman said...

ஆர்வலர்கள் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன் said...

ஈப்போ கவிஞர்களின் கவி நடைகள் வலைப் பதிவுகளில் இடம் பெற்று வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.

பொன் பாவலர் மன்றம் said...

வணக்கம் தமிழ் உறவுகளே =
புதுமைக் கவிஞர் பொன் நாவலன் கவிதைகள் மலரும் நாள்- 17.9.2010 மாலை மணி - 7.00க்கு,இடம்- அருளொளி மண்டபம்,ஈப்போ, மன்ற ஏற்பாட்டில் நடை பெறுகிறது.ஆர்வலர்கள் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.சிறப்பு வருகை-மாண்புமிகு டத்தோ த.முருகையா.டத்தோ.கோ.ராஜு அவர்கள்.

பொன் பாவலர் மன்றம் said...

vanakam.pon paavalar kavinyargaleh

பொன் பாவலர் மன்றம் said...

kadugu siruthaal kaaram pogathu,kudumpam peruthaal kulappam theeraathu !naadu sehlizthaal natpuku aagaathu, nadu vaanin nilavu kaiyilsikkaathu!